இனி, சில தெய்வ வேறுபாட்டினாலும்கொள்கை மாறு பாட்டினாலும், சொராத்திரியரின்முன்னோர் பகைமை கொண்டே பிரிந்து போனதாகத்தெரிகின்றது. செந்து அவெத்தாவிற் கூறப் பட்டுள்ளஅஹூர மஸ்தா இருக்கு வேதத்திற்குறிக்கப்படவில்லை. சொராத்திரியர் அசுரரைநல்லவராகவும் தேவரைத் தீயவராகவுங் கொண்டனர்.இந்திய ஆரியர் கருத்து இதற்கு முரணானது. பாரதக் காலம் (தோரா. கி.மு. 1100-1000)
பீடுமன் பரசுராமனிடம் விற்கலைபயின்றவன் என்று சொல்லப்படுவதால்,பாரதக்காலம் இராமாயணக் காலத்திற்கு இருதலைமுறையே பிற்பட்டதாகும். பாண்டவரும் கௌரவரும் திங்கள்மரபைச் சேர்ந்தவர். வடநாட்டுத் திங்கள் மரபு,பாண்டியன் கங்கைக்கண் நிறுவிய படிநிகராளிவழியினதே. பாண்டவரின் முன்னோர் புதன் (அறிவன்),புரூரவன், ஆயு, நகுடன், யயாதி, பூரு, துடியந்தன், பரதன்,அத்தி, குரு, சந்தனு, பீடுமன், விசித்திரவீரியன்,திருதராட்டிரன், பாண்டு என்போர். பீடுமன் கௌரவபாண்டவரின் பாட்டனும், திருதராட்டிர பாண்டுவர்அவரின் தந்தைமாரு மாவர். பாரதக் காலத்திற் பெயர்பெற்றவனும்பாரதப் போரை இயக் கியவனும் கண்ணன் ஆவன். அவன்தென்னாட்டு ஆயர் மரபுப்படி, கோசல நாட்டரசன்மகள் சத்தியை என்னும் நப்பின்னையை ஏழ் ஏறுதழுவிமணந்தான். அவன் மதுராவில் ஆண்டுகொண்டிருந்தபோது, காலயவனன் என்பவன் பெரு மிலேச்சப்படையுடன் வந்து அந் நகரை முற்றுகையிட்டான். அதைமுன்னரே அறிந்த கண்ணன், குசராத்தின் மேற்கில்அரபிக்கடலிலுள்ள ஒரு தீவில் துவாரகை (துவரை)என்னும் நகரை யமைத்து, அதற்குத் தன் தலைநகரைமாற்றிக்கொண்டான். யவனம் என்பது கிரேக்க நாட்டிற்கொருபெயர். யவனன் கிரேக்கன். சின்ன ஆசியாவிலும்கிரேக்க நாடுகளிருந்தமையால், அவற்றையடுத்துவாழ்ந்த அரபியர்க்கும் அவரையொத்த மூர் வகுப்பாரான வடஆப்பிரிக்கர்க்கும் அப்பெயர்வழங்கிற்று. அதனால், உண்மையான கிரேக்கரைவெள்ளை யவனர் என்றும், அரபியரும் மூராருமானசோனகரைக் காலயவனர் என்றும், நிறம்பற்றிவேறுபடுத்திக் கூறியதாகத் தெரிகின்றது. காலம் =கருப்பு. 'சுன்னத்து' என்னும் வழக்கம்பற்றிச்சோனகர் எனப் பெயர் பெற்றனர் போலும்!மிலேச்சர் = பெலுச்சியர். பெலுச்சியர் நாடேபின்னர்ப் பெலுச்சித் தானம் (Baluchistan) எனப்பட்டது.
|