பக்கம் எண் :

தமிழர் வரலாறு-257

(Analysis)என்னும் பொருளது. நந்நான்கு இயல்கள் (பாதங்கள்)உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்)கொண்டது பாணினி வியாகரணம். அதனால் அதுஅட்டாத்தியாயீ (அஷ்டாத்யாயீ) எனப் பெயர்பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திரங்கள்)ஏறத்தாழ 3980. அந் நூற்குமுன் எண்ணிலக்கண நூல்கள்இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.அவற்றுள் முதலது வேதகாலத்த தெனப்படும் ஐந்திரம்.

தொல்காப்பியம் பாணினீயத்திற்குமுந்நூற்றாண்டு முந்தியது. அதனாலேயே, "ஐந்திரம்நிறைந்த தொல்காப்பியன்" என்று மட்டுங்கூறினார் தொல்காப்பியரின் உடன்மாணவரானபனம்பாரனார். சமற்கிருத இலக்கண நூல்களெல்லாம்பவணந்தி நன்னூல்போல் எழுத்துஞ் சொல்லுமே கூறுவனவென்றும், தமிழிற்போல் ஒரு வழங்கு மொழியைவிளக்காது வேதமும் இதிகாச புராணங்களு மாகியஇலக்கியத்திலுள்ள அரைச் செயற்கையான நடைமொழியையே (Semi-artificial literary dialect)விளக்குவன வென்றும் அறிதல் வேண்டும்.

தொல்காப்பியம் எழுத்துஞ் சொல்லும்பொருளுமாகிய மூவதிகாரங் கொண்டது;பொருளதிகாரத்தில், தமிழுக்கே சிறப்பானபொருளிலக்கணத்துடன் செய்யுளியலையும் அணியியலானஉவமவியலையும் உட்கொண்டது. ஆதலால்,பாணினீயத்தினின்று தொல்காப்பியம்தோன்றியதாகச் சிலர் கூறுவது, பேரன் பாட்டனைப்பெற்ற கதையும், களாச்செடியிற் பலாப்பழம்பறித்த கதையுமே யாகும்.

பாணினி, "அ இ உண்", "ரு லுக்", "ஏ ஓங்", "ஐ ஒளச்", "ஹ ய வரட்", "லண்", "ஞ ம ங ண ந ம்" முதலிய 14குறுங்கணக்கு நூற்பாக்களை, சிவபெருமானின்உடுக்கையினின்று தோன்றிய ஒலிகளாகக் கூறி,அவற்றிற்கு 'மகேசுவர சூத்திரங்கள்' எனப்பெயரிட்டது, இந்தியப் பழங்குடிவாணரை ஏமாற்றத்துணிச்சலுடன் செய்த படுமோசச் சூழ்ச்சியாகும்.

"புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்" 

(சிலப்.11:98-9)

என்னும் சிலப்பதிகார அடிகளைநோக்கின், பாணினியின் ஏமாற்றை மக்கள் நம்பிஅவரிலக்கணத்தையே போற்றிப் பயிலுமாறு, தமிழ்த்தொடர்பு காட்டும் ஐந்திர வியாகரணப் படிகளையெல்லாம் தொகுத்து, அழகர்மலையடுத்ததும் மக்கள்வழங்காததும் ஆழம் மிக்கதுமான ஒரு பொய்கைக்குள்எறிந்துவிட்டதாகக் கருத இடமுண்டாகிறது.தமிழகத்துத் தோன்றிய ஐந்திரம் தமிழகத்திலேயே அழியுண்டது போலும்!