இனி, அப் படை வடுகரையும் துணைக்கொண்டுவந்த தென்பது, "முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந்து" | (அகம்.281) |
என்னும் மாமூலர் கூற்றால் தெரியவருகின்றது. ஆகவே, வடுகர் கோசர் மோரியர்என்னும் மூவின மறவரைக் கொண்டது அப் படை என்பதைஅறியலாம். வடுகரையும் கோசரையும் புறங்காணின்மோரியர் தாமே புறங்காட்டுவர் என்பதை அறிந்தசோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக்காக்கும் கடமையை யுணர்ந்து, முன்பு "வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி" (அகம்.205), பின்புகொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரே யடியாகமோரியரைத் தமிழகத்தினின்று துரத்திச்"செருப்பாழி யெறிந்த" என்னும் விருஅடைமொழியும் பெற்றான். இதனை, "எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" | (அகம்.375) |
என்பதனால் அறியலாம். அவன்"வடவடுகர் வாளோட்டிய" (புறம்.378) செயல்சற்றுப் பிந்தினதா யிருக்கலாம். வடவடுகர்கலிங்க நாட்டுத் தெலுங்கர். கீரந்தையின் வீட்டுக் கதவைத் தட்டி,அதனால் வேண்டாது தன் கையைக் குறைத்துக்கொண்டபொற்கைப் பாண்டியனும், மகனை முறை செய்த மனுமுறைகண்ட சோழனும், கி.மு.2ஆம் நூற்றாண்டினராயிருந்திருக்கலாம். மனுமுறை என்றது வடமொழி மனுதருமசாத்திர முறையையன்று. அந் நூலின் காலம்கி.பி.2ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் தோன்றிய ஆரியதருமநூல்களும், நடுநிலையின்றிக் குலத்திற்கொருமுறை கூறுவனவே. கன்றைக் கொன்றதற்குக்கழுவாய் அல்லது தண்டனை யென்னென்று சோழன்வினவிய போது, பொற்கன்று செய்து பிராமணர்க்குக்கொடுத்து, ஆநிரையொடு காடு சென்று ஒரு மாதம்புன்மேய்ந்து வரவேண்டுமென்று பிராமணர் கூறினர்.அதை அவன் ஒப்புக்கொள்ளாது, உயிருக் குயிரேயீடென்று தன் மகன்மேல் தேரேற்றிக் கொன்றான்.வடநூல்களிற் கதிரவன்குல அரசருள்
|