"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக மாந்தரும்" | (சிலப்.5:16-7) | "கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்" | (சிலப்.5:29-34) |
வேறு பல தொழிலாளரும் தழைத்தோங்கச்செய்தான். ஆயின், அவனும் ஆரியர் சாய்கடையில்வீழ்ந்து, "அறமறக் கண்ட நெறிமா ணவையத்து முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை யெருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் ததுக | (புறம்.224) |
மிகமிக வருந்தக் தக்கதே. கி.பி. 2ஆம் நூற்றாண்டினரானஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனும்,கண்ணகிக்குப் படிமை சமைத்த சேரன் செங்குட்டுவனும், தமிழினத்தின் பெருமையைக் காத்ததனாற்பாராட்டத் தக்கவரே. ஆரியப் படை என்றதுஆந்திரப்பேரரசின் (கி.மு.567-கி.பி.220) வடுகப்படையை. வட நாட்டில் அல்லது வடக்கில்உள்ளவரையெல்லாம் ஆரியரென்னும் வழக்குஇடைக்காலத்தில் எழுந்துவிட்டது. "ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு" என்னும்பழமொழியில், ஆரியக்கூத் தென்றது வடுகரின்கழைக்கூத்தையே. புதைய லெடுத்தவ னென்றுசிறையிலிடப்பட்ட வார்த்திகனை விடுதலைசெய்தபின், நெடுஞ்செழியன் "நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நும் கடனென' | (சிலப்.23:115-7) |
மன்னிப்புக் கேட்டதுடன், "தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கியதே" | (சிலப்.23:118-9) |
|