என்பவற்றால், திருமாலின் பலதோற்றரவுக் கொள்கை புகுத்தப் பட்டதுதெளிவாகின்றது. "கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” | (புறம்.கட.வா.) |
என்பது, ஒரு கட்டுக்கதையால் சிவனைஆரியப்படுத்தும். "நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே" | (புறம். கட. வா.) |
என்பது, சிவபெருமானுக்குப் பிராமணவடிவேற்றுந் தொடக் கத்தைக் காட்டும். திருமுருகாற்றுப்படை, கந்தபுராணக்கட்டுக்கதையால் முருகன் ஆரியத்தெய்வமாக்கப்பட்டதைத் தெரிவிக்கும். தெய்வம்பற்றிய பரிபாடற்பாக்களால், ஆரியத் தெய்வங்க ளெல்லாம்தமிழகத்துட் புகுத்தப்பட்டதை அறியலாம். "தெய்வ மால்வரைத் திருமுனி யருள ....................................... தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை" | (சிலப்.3:1-7) |
என்பதனால், ஒரு வரலாற்று மகளும்ஆரியத் தொல்கதைத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள். ஏமாற்று நோயால் இறந்த அரசருடம்பைப்பிராமணன் தருப்பையிற் கிடத்தி வாளால் வெட்டி,அவருயிரை விண்ணுலகத்திற் கேற்றும் வாள்போழ்ந்தடக்கலும்; பாலைக் கௌதமனார், பத்துப் பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வி வேட்கையில்,தம் மனைவி யாருடன் விண்ணுலகடைந்தா ரென்பதும்;பாண்டியன் அரசியற் பணியாளர் வார்த்திகனைச்சிறையிலடைத்தவுடன், காளிகோயிற் கதவம் தானேசாத்திக்கொண்ட தென்பதும் துணிச்சலான ஏமாற்றுவினைகளாம். பொருள் கவர்வு தமிழ வேந்தரின் பொற்செல்வப்பெருக்கையும் ஏமாளித் தன்மையையுங் கண்டபிராமணர், அவரிடமிருந்து இயன்றவரை பொன்னும்நிலமும் பறிக்கத் திட்டமிட்டுப் பதினாறுதானங்கள் வகுத்துள்ளனர். அவையாவன: (1) | துலாபுருடதானம் | - | ஆள்நிறைப் பொற்கொடை. | (2) | இரணிய கருப்பதானம் | - | பொற் கருப்பைக் கொடை. |
|