நால்வரண நிலைநாட்டு நால்வரணக் கொள்கையை நன்றாகநாட்டுதற்கு, மதுரைக் கோட்டை மதில் நான்கிலும்,வெண்மை செம்மை பொன்மை கருமை ஆகிய நானிற வரணப்பூதவடிவுகளும், முறையே வரையப்பட் டிருந்தன. "தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ....................................... பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ........................................ செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் ........................................ மண்ணுறு திருமணி புரையு மேனியன் ..................................... நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர" | (சிலப். 22:17-108) |
நாடகம் பார்ப்பவர் அனைவரும்காணுமாறு, நால்வரணப் பூதங்களையும் வரைந்த வண்ணப்படம் நாடக வரங்கின்மேல் வைக்கப்பட்டது. "கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கின் நெற்றிமிசை வழுவில் பூதம் நான்கும் முறைப்பட எழுதின ரியற்றல் இயல்புணர்ந் தோரே." | (சீவக.672,நச்.மேற்.) | "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே" | (புறம்.183) |
என்றான் ஆரியப்படை கடந்தநெடுஞ்செழியன். தொழிலாளரைத்தாழ்த்தல் "கட்டில் நிணக்கும்இழிசினன்" | (புறம். 82) | "துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" | (புறம். 287) |
என்பன, கட்டில் பின்னுவானையும்பறையடிப்பானையும் இழித்துக் கூறுவன. "கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவிற் கைக்கோற் கொல்லன்" | (சிலப்.16:105-8) |
|