|
| தெலுங்கு மொழியை முதன் முதலாகக் குறிப்பிட்ட அயலார் 7ஆம் நூற்றாண்டினரான ஹு வென் த்சாங் (Hwen Thsang) என்னும் சீனத் திருப்போக்கர் (யாத்திரிகர்). |
| |
|   |
| |
| "சுரஞ்செல் கோடுயர் கதுமென விசைக்கு | நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட் | கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் | நெடும்பெருங் குன்ற நீந்தி" (நற்.212) |
|
| |
|   |
| |
| என்று குடவாயிற் கீரத்தனாரும், |
| |
|   |
| |
| "குல்லைக் கண்ணி வடுகர் முனையது | பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் | மொழிபெயர் தேஎத்த ராயினும் | வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே" (குறுந். 11) |
|
| |
|   |
| |
| என்று மாமூலனாரும், |
| |
|   |
| |
| "நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் | தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு" (சிலப். 8:1-2) |
|
| |
|   |
| |
| என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், கடைக்கழகக் கலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தெலுங்கு வழங்கவில்லை யென்பது வெளிப்படை. |
| |
| நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தியடிகள்) சேரநாடு சென்று மீண்டபோது, அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பொருளைத் திருமுருகன் பூண்டியில் சில வடுகர் (அல்லது வடுகவடிவில் வந்த சிவபூதங்கள்) வழிப்பறித்ததால், 9ஆம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறிவிட்டனர் என்பது போதரும். |
| |
|   |
| |
| "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் | திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொ டாறலைக்குமிடம் | முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமா நகர்வாய் | இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீரெம் பிரானிரே" |
|
| |
|   |
| |
| என்பது நம்பியாரூரரின் திருமுருகன் பூண்டிப்பதிக முதற் செய்யுள். |