பக்கம் எண் :

பாவாணர் இறுதிப் பேருரை87

என்றிருக்கிறது. ஆங்கிலம் என்று சொல்லும்பொழுது தனியாய் ஆங்கிலம் என்றே நாம் கருதிவிடக்கூடாது. ஆங்கிலம் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய மொழி. அது இந்த "தியூத்தானியம்" என்ற பிரிவைச் (Teutonic) சேர்ந்தது. உலகத்திலே உள்ள சிறந்த மொழிகள் எல்லாவற்றையும் மாக்கசு முல்லர் (F. Maxmuller) மூன்று பெரும் பிரிவாக வகுத்திருக்கின்றார். (1) ஆரியக்குடும்பம் (Aryan) (2) சித்தியக் குடும்பம் (Scythian) எனப்படும் துரேனியக்குடும்பம் (Turanian) (3) சேமியக்குடும்பம் (Semitic) என்றும். அதற்குள்ளே - தியூத்தானிக்கு என்பது ஒன்று, தியூத்தானிக்கைச் சேர்ந்தது இந்த ஆங்கிலமொழி. ஆங்கிலத்துக்கும் நமக்கும் மிகுந்த நெருக்கமுண்டு. அதைச் சொல் வதற்கு நேரமில்லை. அது நூல்வடிவாகப் பின்னாலே வெளிவரும், உலகமுழுவதும் அறிவதற்கு.

இந்த மன் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்திலே Man என்று இருக்கிறது. அதைத்தான் சமற்கிருதத்தில் அவர்கள் மனு என்று விரித்தார்கள். இந்த மனுவிலிருந்துதான் மனுஷ என்ற சொல் பிறகு திரிகின்றது.

ஆகவே இதற்கெல்லாம் மூலம் இந்த மன் என்ற சொல்தான். அவர்கள் தமிழ் அறியாததினாலே, thinking man - man is thinking animal - அவன் கருதுகின்ற ஆற்றலுடைய ஓர் உயிரினம்-உயிர்ப் பொருள். ஆகையினாலே munan (to think) அதிலிருந்து வந்தது என்று கருத்துச் சொல்வார்கள். ஆனால் அந்த மன் என்கிற சொல் கருது தலைக் குறிக்கிறது - மனு என்ற சொல்லானது தமிழ் "முன்" என்றதி லிருந்து வந்தது.

முன்னுதல் என்றால் கருதுதல் தமிழிலே. அப்படியே ஆங்கிலப் பேரகர முதலியிலே முனன் (Munan) என்றே இருக்கிறது. (Munan, to think) என்று இதே வடிவத்திலே இருக்கிறது. முன் என்றால் கருது என்று பொருள். அது வேறு சொல். பழைய நிகண்டுகளைப் பார்ப்பீர்க ளானால் மனத்திற்கு முன்னம் என்றிருக்கும்.

முன்னம் - முனம் - மனம் (உள்ளம்).

உகரம் அகரமாகத் திரியும்போது மனம் என்றாகிறது. அந்த மனம் என்பதை மனஸ் என்பார்கள் சமசுகிருதத்திலே. மகர ஈறு ஸகர ஈறாக மாறும். சமசுகிருதத்திலே. அது இலத்தீனிலே மெனசு (Mens) என்றிருக்கிறது. இப்படி மேலை ஆரிய மொழிகளெல்லாம் திரிந்திருக்கின்றன. இன்னும் ஒரே ஒரு சொல் "ஊர்" எனும் பேரை நான் சொல்கிறேன்.

இங்கே இந்தியாவிலே உள்ள இந்தூர் முதலான பெயர்கள் மட்டுமல்ல, அங்கே பாபிலோனியா நாட்டிலே ஊர் என்று ஓர் ஊர் இருந்தது. அந்தப் பேருக்கே - அந்தச் சொல்லிற்கே அக்கேடியன் (Akkadian) மொழியிலே - அந்த சுமேரியன் மொழியிலே City என்று தான் பொருள். அதே பொருளிலேதான் தெற்கே வழங்கினது, குமரி நாட்டிலே இந்தச் சொல்.