பக்கம் எண் :

24மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    கவ்வு-கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு.

     கப்புங் கவரும் என்பது உலக வழக்கு.

     கப்பு-கப்பி. கப்பித்தல் = கவர்படுதல்.

     "கப்பித்த காலையுடைய ஞெண்டினது" (பெரும்பாண். 208, உரை)

     கப்பு-கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால்.

     கவ்வு-காவு. காவுதல் = 1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை
     அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல்.

     "காவினெங் கலனே" (புறம். 206)

     2. தோளிற் சுமத்தல், சுமத்தல்.

     "ஊனைக் காவி யுழிதர்வர்" (தேவா. 338: 1)

     காவு + அடி = காவடி = 1. காவுதடி. 2. முருகன் காவடி. 3. சோற்றுக்
     காவடி. 4. தண்ணீர்க் காவடி.

     காவடி-காவட்டு = கள்ளுக் காவடி.

     காவு-கா = 1. காவடித் தண்டு.

     "காமமு நாணு முயிர்காவாத் தூங்கும்" (குறள். 1163)

     2. காவடி போன்ற துலாக்கோல்.

     3. துலாம் போன்ற ஒரு நிறை.

     "காவென் நிறையும்" (தொல். எழுத்து. 169)

     கப்பு = காவுந்தோள்.

     "கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த" (திவ். பெரியாழ். 3: 1: 5)

     கவல்-கவலை = 1. மரக்கிளை(பிங்.).2. கவர்த்த வழி, பல தெருக்கள்
     கூடுமிடம்.

     "மன்றமுங் கவலையும்.....திரிந்து" (சிலப். 14 : 24)

     "கவலை முற்றம்" (முல்லைப். 30)

     3. மனக்கவற்சி, மனவருத்தம்(கவர்த்த எண்ணம்). ம. கவல.

     4. அச்சத்தோடு கூடிய அக்கறை.

     கவலுதல் = பலவாறாகக் கருதி வருந்துதல். க. கவலு.

     கவல்-கவலம், கவலை. கவல்-கவலி. கவலித்தல் = கவலுதல்.

     கவை = கரிசனை, அக்கறை.

     கவ்வை = கவலை.

     "கவ்வையாற் கலங்குமனம்" (திருக்காளத். பு. 18 : 27)

கைப்பற்று

    கவ-கவவு = 1. கையால் தழுவுதல்."கண்ணு நுதலுங் கவுளுங்
கவவியார்க்கு" (கலித். 83 : 17)