கவ்வு-கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு. கப்புங் கவரும் என்பது உலக வழக்கு. கப்பு-கப்பி. கப்பித்தல் = கவர்படுதல். "கப்பித்த காலையுடைய ஞெண்டினது" (பெரும்பாண். 208, உரை) கப்பு-கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால். கவ்வு-காவு. காவுதல் = 1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல். "காவினெங் கலனே" (புறம். 206) 2. தோளிற் சுமத்தல், சுமத்தல். "ஊனைக் காவி யுழிதர்வர்" (தேவா. 338: 1) காவு + அடி = காவடி = 1. காவுதடி. 2. முருகன் காவடி. 3. சோற்றுக் காவடி. 4. தண்ணீர்க் காவடி. காவடி-காவட்டு = கள்ளுக் காவடி. காவு-கா = 1. காவடித் தண்டு. "காமமு நாணு முயிர்காவாத் தூங்கும்" (குறள். 1163) 2. காவடி போன்ற துலாக்கோல். 3. துலாம் போன்ற ஒரு நிறை. "காவென் நிறையும்" (தொல். எழுத்து. 169) கப்பு = காவுந்தோள். "கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த" (திவ். பெரியாழ். 3: 1: 5) கவல்-கவலை = 1. மரக்கிளை(பிங்.).2. கவர்த்த வழி, பல தெருக்கள் கூடுமிடம். "மன்றமுங் கவலையும்.....திரிந்து" (சிலப். 14 : 24) "கவலை முற்றம்" (முல்லைப். 30) 3. மனக்கவற்சி, மனவருத்தம்(கவர்த்த எண்ணம்). ம. கவல. 4. அச்சத்தோடு கூடிய அக்கறை. கவலுதல் = பலவாறாகக் கருதி வருந்துதல். க. கவலு. கவல்-கவலம், கவலை. கவல்-கவலி. கவலித்தல் = கவலுதல். கவை = கரிசனை, அக்கறை. கவ்வை = கவலை. "கவ்வையாற் கலங்குமனம்" (திருக்காளத். பு. 18 : 27) கைப்பற்று கவ-கவவு = 1. கையால் தழுவுதல்."கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க்கு" (கலித். 83 : 17) |