பக்கம் எண் :

சொல்வேர் காண்வழிகள் 63

7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல்

     சொல்லாக்க முறையில், ஒவ்வோரெழுத்தும் சில்வேறெழுத்தும்
பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக்
கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம்.

     எ-கா: ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு.

     ள - க : உளி - உகிர், தளை - தகை.

     ள - ச : உளி - உசி - ஊசி - வ. சூசி.

     ள - ட : நளி - நடி, மகள் - மகடூஉ.

     ள - ண : பெள் - பெண், வள் - வளர் - வணர்.

     ள - ய : தொள் - தொய், மாள் - மாய்.

     ள - ர : நீள் - நீர், வள் - வார்.

     ள - ல : கொள் - கொல்.

     ள - ழ : காள் - காழ், துளசி - துழாய்.

     ள - ற : தெள் - தெறு - தெற்று, வெள் - வெறு.

     ள - ன :முளை - முனை, வளை - வனை.

8. சொற்றிரிபறிதல்

     எ-கா:அரம்(சிவப்பு)-அரத்தம்(சிவப்பு)-அரத்தி-அத்தி = சிவந்த பழம்,
           அப் பழமரம். அகல்-ஆல் = அகன்று படரும் மரம்.
           கோநாய்-ஓநாய். தமப்பன்-தகப்பன். தகு + அப்பன் என்று
           பிரிப்பது தவறாம்.

9. சொற்களின் திருந்திய வடிவறிதல்

     இடைகழி-டேழி(கொச்சை)-ரேழி(கொச்சை). மணித்தக்காளி -
மணத்தக்காளி(கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை
வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளையும் அறியமுடியாது.

10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல்

     சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரி னின்று
பிறந்து ஒரு வடிவுகொண்டு நிற்கும். அவற்றை வேறுபடுத்தியறிதல் வேண்டும்.

     எ-கா:

     மணி1 = கரியது.

     மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால்.

     மால் - மாரி = முகில், மழை, கரிய காளி.

     மால் - மா = கருமை. மா - மாயோன் = கரிய திருமால்.

     மாயோள் = கரிய காளி.

     மல்-மள்-மறு = களங்கம், கரும்புள்ளி.