பக்கம் எண் :

பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா? 67

 

-67-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    சொல் - சோல் - சோர். சோர்தல்= உள்ளிருந்து கசிதல், வடிதல்,   விழுதல், தளர்தல், சோர்(க.) ,
    சோலு (தெ.).
    சோர் - சோரி-வடியும் அரத்தம்.
    சோல - (சோன்) - சோனம் = சொரியும் முகில்.
    சோன் - சோனை = பெருமழை வீழ்ச்சி, கார்முகில்.
    சோனையா (ம்) மாரி-சோனாமாரி.

    இச் சொற்களால், சுருங்கை என்பது சுல் என்னும் அடிவேரினின்று, தோன்றி, சுரி என்னும் சொல்லோடு தொடர்புடையதாய், துளைக்கப்பட்டது என்னும் பொருளில் கீழ்நில வழியைக் குறிக்கும் என்பது தெளிவாம்.

கன்னல்
    கல்லுதல் = கில்லுதல், தோண்டுதல், குடைதல்.
    ''மலைகல்லி எலிபிடிக்கிறது'' என்பது ஒரு சொலவடை.
    கல்-கலம்= மரம், கல் முதலியவற்றிற் குடைந்து செய்யும் ஏனம்,     தோணி.
    கல்-கன் = உட்குழிந்த துலைத்தட்டு, செப்புக் கலம், செப்புக்கலத் தொழில், செம்பு.
    கன்-கன்னான் = செப்புக்கலம் செய்யும் கம்மாளன்.
    கன்-கன்னம்= துளையுள்ள காது, காதை யடுத்த அல்லது உட்குழிந்த கதுப் பு (ஒ.நோ: செவி-செவிடு = காதை யடுத்த கன்னம்), துலைத்தட்டு, கள்வர் சுவரிலிடும் துளை.
    ''செவிட்டைக் கட்டி அடித்தான்'' என்னும் வழக்கை நோக்குக.
    கன்-கன்னல் = 1. நீர்க்கலம். ''தொகுவாய்க் கன்னல் தண்ணீ ருண்ணார்'' (நெடுநல். 65).
                2. நாழிகை வட்டில்.
                ''கன்னலின் யாமங் கொள்பவர்'' (மணிமே. 7 : 65).
                3. நாழிகை வட்டிலால் அறியப்படும் கால அளவு.
                4. உட்டுளையுள்ள புல்வகையைச் சேர்ந்த நாணற்கரும்பு.
                5. கருப்பஞ் சாற்றிலிருந்து செய்யப்படும் சருக்கரை அல்லது     கற்கண்டு.
                6. சருக்கரை கலந்து அடும் அடிசில் (பாயசம்).
    ஒ.நோ. : நுள்-நள்-நாளம் = உட்டுளை, உட்டுளையுள்ள தண்டு.
    நள்-நாள்-நாளி-நாழி = உட்டுளையுள்ள மூங்கிற்படி, படி, அம்புப்