|
| அல் - அலவன் = இரவில் விளங்கும் திங்கள், இரவில் நன்றாய்க் கண்தெரியும் பூனை. |
| அல் - அல்லோன் = திங்கள் (பிங்.) |
| அல் - இல் - இர் - இரா - இர - இரவு |
| இர் - இரு - இருள் - இருளன். |
| இருள் - இருட்டு = இருள், அறியாமை. |
| K., M. irul, Tu. irlu, T. irulu. |
| இரு = கரிய "இருமலர்க்குவளை" (சீவக. 1171) |
| இருமை = கருமை. (சீவக. 1171) |
| இரவு - இரவன் = திங்கள். இரவன் - இரவோன் - இராவோன். "இரவன் பகலோனும்" (தேவா. 571, 4) |
| இரவு - இரவம் = இருள்மரம் (புறம் 281) |
| இரா - இராகு = கருங்கோள். S. rahu. |
| இராப்பு = ஆம்பல் முதலியன (சிலப். 2 : 14, உரை). |
| இரா - இராத்திரம் - இராத்திரி - ratri. (S.) |
| இருண்மலம் = ஆணவமலம். "இருள்மலத்தி னழுந்தி" (சிவப்பிர. 2, 1) |
| இருணிலம் = நரகம் (திவா.) |
| இரு - இருந்து - இருந்தை = கரி. |
| "வலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று" (நாலடி. 258) |
| இருந்து - இருந்தில் = இருந்தை. (திங். பெரியதி, 2, 10, 3) |
| K. iddal M. irunnal. |
| இரு - இரும் - இரும்பு = கரிய கனியம் (உலோகம்) |
| M. irumbu, T. irunu. |
| O.E. iren, E. iron. |
| O.E. Iserr, Isen, OS, OHG, ON isarn, |
| Goth. eisarn, S. ayas. |
| இரு - இறு - இறடி = கருந்தினை (திவா.) |
| இறு - இறுங்கு = காக்காய்ச் சோளம். |
| இல் - எல் = இரவு. |
| |
| "எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல்" (நாலடி, 8) |
|
| |