பக்கம் எண் :

பின்னினைப்பு159

     எல்லிருள் = இராவிருள்.
     எல் - எல்லி = 1. இரவு. "எல்லியிது காலையிது" (சீவக. 1877)
     2. இருள். "நீரரை யெல்லியியங்கன்மினே"
     (இறை. 20, எடுத்துக்காட்டுச் செய்யுள் 217)
     எல்லிநாயகன் = திங்கள். எல்லிப்பகை = கதிரவன்.
     எல் - என் - ஏன் = கரியவிலங்கான பன்றி.
     "ஏனொருவனா யெயிற்றில் தாங்கியதும்" (திவ். இயற். நான். 70)
     ஏன் - ஏனம் = பன்றி
     "இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்" (தொல். பொ. 623.)
     ஏன் - ஏனல் = கருந்தினை (சூடா).
     ஏன் - ஏனை - யானை - ஆனை.
     இன்றும் யானையை ஏனை என்னும் வழக்கு நெல்லை நாட்டில் உள்ளது.
     T. enuga, M.ana, K., Tu. ane.
     இரு - எரு - எருமை = கரியமாடு. "குவிமுலை படர்மருப் பெருமை" (சீவக. 2102).
     M. eruma, Tu. erme, t.enumu, K. emme. S. heramba.
     எருமை மறம் = மறவனொருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ. 7, 13)
 
"ஒருவ னொருவனை யுடைபை ட புக்குக்
 கூழை தாங்கிய எருமையும்"
(தொல். பொ. 72)