இன்னும், சாவக நாடும், அதன் தலைநகரமாகிய நாகபுரமும்
மணிமேகலைக் காவியத்தில் குறிக்கப்படுகின்றன5. தமிழ் நாடு தன்னரசு
பெற்றிருந்த போது கடல் சூழ்ந்த பல நாடுகளில் தமிழ்க் கொடி பறந்தது.
திக்கெல்லாம் புகழும் திருநாடாகத் தமிழகம் விளங்கிற்று.
“சிங்களம் புட்பகம் சாவகம்-ஆதிய
தீவு பலவினும் சென்றேறி-அங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”
என்று அந் நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார் பாரதியார்.
இக் காலத்தில் தமிழன்னையின் திருமுடி யெனத் திகழ்வது
திருவேங்கடமலை. அம் மலையை “மாலவன் குன்றம்” என்பர்.
“நீலத் திரைகடல் ஓரத்திலே-நின்று
நித்தம்
தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன்
குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக்
கிடக்குந் தமிழ்நாடு”
என்று குறுகி நிற்கும் தமிழகத்தின் பெருமையைக் கூறிக் கவிஞர்
மகிழ்கின்றார்.
அடிக் குறிப்பு
1. இசை நுணுக்கம் இயற்றிய சிகண்டியார் பாட்டு.
2. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 - 20.
3. Comparative Grammer of Dravidian Language Introduction. P.98.
4. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 35 - 36.
5. மணிமேகலை, காதை 14, வரி 74. |