"அறம் பொருள் இன்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல்களும் அவை சார்பாக வந்த சோதிடமும் சோகினமும், வக்கின கிரந்த மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத்திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும் பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகல நூலும், அருங்கல நூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொரு ளுபதேசமும்" என்னும் யாப்பருங்கலவிருத்தியால் இலக்கண இலக்கியங்களல்லாத பல தொழில்களைக் கற்பிக்கும் பலகருவி நூல்களும் இருந்தன வென்பது புலனாகின்றது. ஒரு நாவிதன் அலங்காரம் என்னும் நாவித நூல் இயற்றி அரசனிடம் பரிசு பெற்றதாகச் சிந்தாமணியிற் சொல்லப்படுகிறது. வீமனாற் செய்யப் |