வில்லை. மக்கட் படைப்பு இவ்வுலகில், பத்து அல்லது இருபது இலட்சம் வருடங்களுக்குமுன் தோன்றியிருக்கவேண்டுமெனச் சாத்திரிகள் கருதுகின்றனர். மனுவின் காலத்தில் ஒரு வெள்ளப்பெருக்கு உண்டானதென்றும், அவ்வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்திருந்த மனுவினின்றும் மக்கட் சந்ததி பெருகியதென்றும் புராணங்கள் நுவல்கின்றன. |
சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியாவிலேயே பல்கியது என சர் வால்டர் ரலி என்னும் மேல்நாட்டறிஞர் கூறுகின்றனர்.1 |
மனு கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தவஞ் செய்து கொண்டிருந்த ஒரு முனிவர்2 என மச்சபுராணங் கூறுகின்றது. மனு சத்தியவிரதனென்னுமொரு தமிழ் வேந்தனெனப் பாகவத புராணம் புகலும். வையை நதிக்குக் கிருதமாலையென்னும் பெயர் ஆலாசிய மான்மியத்திற் காணப்படுகிறது.3 |
தமிழ்நாட்டுப் பழைய வேந்தர்களாகிய முசுகுந்தன் சிபி முதலானோர் மனுவழித் தோன்றியவர்களெனச் சொல்லப்படுகின்றனர். |
பழைய புராண வரலாறுகளிற் சொல்லப்படும் அரசர் முனிவர்களும் தென்னாட்டினராகவே எண்ணப்படுகின்றனர். காசிபர் பழைய இலங்கையை ஆண்ட சூரபன்மா |
|
1. According to Sir Walter Raleigh, India was the first planted and peopled country after the flood. |
--Dravidian India. |
2. "Manu is spoken of in Bhgavada-Purana as the Lord of Dravida. |
3. "In the XII Chapter of the Alasya Mahatmya portion of the Skandha purana where Suta-muni addressing Rishis says as follows:- `I have described to you the origini of the river Vaigai. This river is also named as Siva-Gangai, Vegavathi, Siva Gnanam Vilambiti and Kritamalai.ழு -- Tamilian Antiquary No.1. |