தென்னாடு |
உலகின் பழம்பெரு நாடுகளில் தென்னாடு ஒன்று. அதுவே மனித இனத்தின் பிறப்பிடம் என்று மண்ணூலார் சாற்றுகின்றனர். வரலாறு தரும் சான்றுகள் இந்நாட்டுக்குத் தனிப்பெருஞ் சிறப்புக்களை வழங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்நாடே மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும், வளர்ப்புப் பண்ணையாகவும் இருந்திருக்கிறது. |
தென்னாட்டின் முழு வரலாறு இது வரையில் தொடர்ச்சியாக எழுதப்படவில்லை. அதன் தொடக்க காலம் இன்னும் வரலாற்றுக்கு எட்டாததாகவே இருக்கிறது. எனினும், இக்காலப் புதை பொருள் ஆராய்ச்சிகளால், அதன் பழம் பெருமைகள் அறிவுலகுக்குப் படிப்படியாக விளக்கமடைந்து வருகின்றன. |
இன்றைய நாகரிக நாடுகளின் வரலாறுகளெல்லாம் சென்ற இரண்டாயிர ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. ஆனால் இந்நாடுகளின் வரலாறு தோன்றுவதற்கு முன்பே, கிரேக்க உரோம நாகரிகங்கள் தலைசிறந்து விளங்கின. இவற்றின் காலம் *கி.மு. |
|
*கி.பி. என்பது கிறித்துவுக்குப் பின். கி.மு. என்பது கிறித்து பிறப்பதற்கு முன். எனவே, கி.மு. 1000 என்பது இன்றையிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். |