கடைசி பீஜப்பூர் அரசன் சிகந்தர் (1672-1686) காலத்தின் இறுதியில் பீஜப்பூர் தில்லியின் அந்நாளைப் பேரரசன் அவுரங்கசீப்பினால் கைக்கொள்ளப்பட்டது. |
கோல்கொண்டா அரசர் குத்ப்ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். முதல் அரசன் குலீப், பகமனியின் கீழ் தெலுங் காணத்தை ஆண்டவன். 1512 அல்லது 1518-ல் அவன் கோல்கொண்டாவைத் தலைநகராகக் கொண்டு தனி அரசு நிறுவினான். இப்ரஹீம் அரசன் காலத்தில் (1550-1581) வேங்கிநாடு என்று முன்பு அழைக்கப்பட்டிருந்த ஆந்திரக் கீழக்கரைப் பகுதி கோல் கொண் டாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு வலிமையுடன் இயங்கியபின் 1687-ல் கோல்கொண்டா அரசரும் தில்லிப் பேரரசரின் படையெடுப்புக்கு ஆளாய் நாடி ழந்தனர். |
அகமது நகரின் அரசர் நிசாம்ஷாக்கள் ஆவர். முதல் அரசன் மாலிக் அகமத் 1489-ல் அகமது நகரைப் புதிதாக அமைத்துத் தனி யாட்சி ஏற்படுத்தினான். அவன் மரபில் வந்த ஹு சேன் (1554-1565) அடிக்கடி பீஜப்பூருடன் போரிட்டான். அத்துடன் அமையாது விசயநகரப் பேரரசைத் தலைக்கோட்டைப் போரில் நிலை குலையச் செய்யவும் அவனே பெரிதும் காரணமாயிருந்தான். பகதூர் (1597-1600) ஆட்சியில் தில்லிப் பேரரசன் அக்பர், அகமது நகர்மீது படையெடுத்தான். அரசன் இறந்த பின்னும் அரசி சாந்த் பீபீ வீரத்துடன் போரிட்டு மாண்டாள். தென்னாட்டின் வீரமிக்க பெண்ணரசிகளுள் சாந்த் பீபீ இடம் பெற்றாள். 1600-ல் அகமது நகரம் தில்லிப் பேரரசில் இணைக்கப் பெற்றது. |
பீடார், பீரார் ஆகிய இரண்டு அரசுகளும் மிகக் குறுகிய காலமே தனியரசுகளாக நிலவின. அவை விரைவில் அகமது நகர் அரசுடன் இணைந்துவிட்டன. |
விசயநகரப் பேரரசு |
முசல்மான் படைவீரர்களின் ஆட்டூழியங்களாலும் பகமனிப் பேரரசர்படையெடுப்புக்களாலும் தென்னாட்டில் மக்களிடையே |