ஒன்று கடல் கொண்ட தமிழக மரபு. மற்றொன்று முச்சங்க மரபு. |
கடல் கொண்ட தமிழக மரபு வருமாறு: |
குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயுமிடத்தில், ஓர் அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக் கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன. |
மற்றும் பஃறுளி யாற்றுக்குத் தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும்; பஃறுளி குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பானைநாடு ஆகிய 49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம் நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன. |
பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலை நகரமான தென் மதுரையும், குமரியாற்றின் கடல் முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல் கொண்டபின் வைகையாற்றின் கரையிலுள்ள மதுரை கடைசித் தலைநகரமாயிற்று. |
முச்சங்க மரபு |
முச்சங்க முத்தமிழ் மரபு கடல்கொண்ட தமிழக மரபுடன் இயையும் தொடர்பும் உடையது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் பழமையான உரை இதை விளக்கமாகத் தருகிறது. |
பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நிறுவினார்கள். |
தலைச்சங்கம் காய் சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர் காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில் |