நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர் உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட்டாசான், தொல்காப்பியனார், பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது. | இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியம்; இயல் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசைநூல்கள்; முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும் பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம்வாமனம், புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச் சங்க காலத்தவை என்று குறிப்பிடப்படுகின்றன. | இடைச்சங்கம் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை, 59 பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 3700. தலைசிறந்த புலவர்கள் அகத்தியர், தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்காப்பியன், சிறுபாண்டரங்கன், துவரைக்கோன், கீரந்தை ஆகியவர்கள். | அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம் இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவையும் கொள்ளப்பட்டன. | கடைச்சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர் காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் | | |
|
|