பக்கம் எண் :

46
 
நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர்
உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த
விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன்,
முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட்டாசான், தொல்காப்பியனார்,
பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது.
 
     இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியம்; இயல்
தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசைநூல்கள்;
முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும்
பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம்வாமனம்,
புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச் சங்க காலத்தவை என்று
குறிப்பிடப்படுகின்றன.
 
     இடைச்சங்கம் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை, 59
பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில்
நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர்
உட்பட, பாடிய புலவர் தொகை 3700. தலைசிறந்த புலவர்கள் அகத்தியர்,
தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்காப்பியன்,
சிறுபாண்டரங்கன், துவரைக்கோன், கீரந்தை ஆகியவர்கள்.
 
     அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல்
ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம் இசை நுணுக்கம், பூதபுராணம்
ஆகியவையும் கொள்ளப்பட்டன.
 
     கடைச்சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர்
காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன்
உறுப்பினர்