பக்கம் எண் :

47
 
தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449.
தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்
குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார்,
கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள்.
 
     பாடப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு; குறுந்தொகை நானூறு, நற்றிணை
நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல்,
கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.
 
புராண மரபும் தமிழ் மரபும்
 
     இந்த இரண்டு மரபுரைகளும் புராண மரபுரைகள் அல்ல. ஆனாலும் அவற்றில்
புராணமணம் வீசாமலில்லை. தெய்வங்கள் புலவருடன் வந்து இடம் பெறுகின்றனர்.
ஆண்டுகள் ஆயிரப் பதினாயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றன.
 
     ஆனால் இவற்றைப் பொய் என முற்றிலும் விலக்கிவிடவும் முடியவில்லை.
அவற்றில் போதிய உண்மைகள் இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம், சங்க
இலக்கியம், சிலப்பதிகாரநூல் மரபு, உரைமரபு முதலியவை வலியுறுத்துகின்றன.
 
     சங்க இலக்கியம் என்ற பெயரில் இன்று நம்மிடையே இருக்கும் இலக்கியம்
கடைச்சங்க இலக்கியம். மரபுரையில் குறிப்பிட்ட நூல்களின் விவரங்களுடன் அது
பெரும்பாலும் ஒத்துள்ளது. தொல்காப்பியம் இடைச்சங்கம் அல்லது முதல் சங்கத்துக்கு
உரியது.
 
     முச்சங்க மரபின் பெரும் பகுதி உண்மை என்பதை இவை காட்டுகின்றன.
 
தவிர, சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட முத்தமிழ் மரபைச் சிலப்பதிகாரமும் அதன்
உரையும் மறுக்கமாட்டாத நிலையில்