பட்டங்களை மேற்கொண்டனர். ஐந்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் குறுநில மன்னராகவே இருந்தனர். கி.பி. 450-ல் பாணர்களை ஒடுக்குவதற்காகவே பல்லவன் சிம்மவர்மனால் அவர்கள் முடியுரிமை அளிக்கப்பட்டனர். ஆனால் அந் நூற்றாண்டிலேயே கடம்பர்களாலும் 6-7ம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களாலும் அவர்கள் கீழடக்கப்பட்டு அவர்கள் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். ஆயினும் சிற்றரசர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர். 7-ம் நூற்றாண்டில் சாளுக்கிய இராஷ்டிரகூடரால் அடக்கப் பட்டபின், கங்கர் தன்னாட்சி பெற்றனர். | 805 முதல் 810 வரை ஆண்ட இரண்டாம் சிவமாரன் இராஷ்டிரகூட அரசன் துருவனால் வீழத்தப்பட்டு, மூன்றாம் கோவிந்தனால் மீட்டும் அரசுரிமை வழங்கப்பட்டான். அடுத்த அரசன் விஜயாதித்தியன் (810-840) கிழக்குச் சாளுக்கியருடனும், அவன் பின்னர் வந்த முதலாம் பிருதிவீபதி வரகுண பாண்டியனுடன் திருப்புறம்பயத்தில் போர் புரிந்தனர். திருப்புறம்பயப் போரில் பிருதிவீபதி உயிரிழந்தான். | 9,10-ம் நூற்றாண்டுகளில் கங்கர் மீண்டும் சோழருக்கும் இராஷ்டிரகூட அரசர்களுக்கும் கீழடங்கியவர்களாக இருந்து, அப்பேரரசர்களிடையே போரில் எதிரிகளைத் தாக்கும் கருவிகளாக இருந்து வாழ்ந்தனர். இவ்வகையில் இரண்டாம் பிருதிவீபதி (900-940) முதலாம் பராந்தக சோழனின் ஆளாய், பானர்களின் நிலத்தோடு செம்பியன் மாவள வாணராயன் என்ற பட்டமும் பெற்றான். இரண்டாம் பூதுகன் (939- 950) இராஷ்டிரகூட அரசனாகிய மூன்றாம் கிருஷ்ணனுடன் சேர்ந்து தக்கோலப்போரில் சோழன் முதலாம் இராசதித்தியனைக் களத்தில் கொன்றான். மாரசிம்ஹன் (961-974) நொளம்ப பல்லவரால் 8-ம் நூற்றாண்டு முதல் ஆளப்பட்ட நொளம்பவாடி மும்பத்தாறாயிரத்தை வென்றான். கடைசி கங்க அரசனான | | |
|
|