எளிமை = எளிதாய்ச் செய்யும் நிலை, தாழ்வு, வறுமை, தளர்வு. எளிய விலை - குறைந்த விலை. எளியன் = வறியவன், தாழ்ந்தோன், எளிதாய் அடையப் படுபவன். எளிவு - எளிய தன்மை. “உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே” (திவ். திருவாய். 1 3 1) எளுமை = எளிமை. எள் - எய். எய்த்தல் = 1. இளைத்தல். “எய்த்த மெய்யே னெய்யே னாகி” (பொருந. 68). 2. உடம்பு வருந்துதல். “எய்யாமை யெல்லா வறமுந் தரும்” (குறள். 296). 3. குறைவுறுதல். “எய்த்தெழு பிறையினை விளைவின் றாக” (இரகு. யாகப். 8). எய்ப்பு = 1. இளைப்பு. “எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து” (தேவா. 189 3). 2. வறுமைக் காலம். “எய்ப்பினில் வைப்பென் பது” (பழ. 358). “எய்ப்புழி வைப்பாம் என” (பழ. 136). எய்ப்பில் வைப்பு = இளைத்த காலத்தில் உதவுதற்கு ஈட்டி வைக்கப்படும் ஏமப்பொருள். “அப்பாவென் னெய்ப்பில் வைப்பே” (தாயு, பராபர. 25) எய்ப்பினில் வைப்பு = எய்ப்பில் வைப்பு (provident fund) “நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை” (தேவா. 818 2) எள் - ஏள் - ஏளனம் = இகழ்ச்சி. ஏள் - ஏளிதம் = இகழ்ச்சி. ஏள் - ஏசு. ஏசுதல் = இகழ்தல். ஏள் = ஏழ் - ஏழை. ஏழை = 1. வறியவன். 2. அறியாமை. “ஏழைத் தன்மையோ வில்லை தோழி” (கலித். 55 23, உரை). 3. அறிவிலான், அறிவிலாள். “ஏமுற்ற வரினும் ஏழை” (குறள். 873). 4. பெண். “எருதேறி யேழையுடனே” (தேவா. 1171 2). ஏழைமை = வறுமை, அறியாமை. ஏள் - ஏட்டை = 1. வறுமை. “ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி. 358). 2. இளைப்பு. “வெண்ணிணத்த |