பக்கம் எண் :

135

துற்று - துத்து - துது - துதை. துதைதல் = 1. செறிதல். “தோடமைமுழவின் துதைகுர லாக’’ (அகம். 82). 2. மிகுதல்.

துதை - ததை. ததைதல் = நெருங்குதல். “ததையிலை வாழை’’ (ஐங். 460).

துது - தொது - தொதி = பப்பரப்புளி.

தொது - தோது = 1. தொடர்பு. அதற்கும் இதற்கும் என்ன தோது? (உ. வ.). 2. பொருத்தம். மாப்பிள்ளைக்கும் பெண்ணிறகும் தோதில்லை. (உ. வ.). 3. ஒப்பு. அவனுக்குத் தோது எவனுமில்லை. (உ. வ.).

தெ., க. தோடு.

தும்- திம் - திம்மை = 1. பருமன். 2. கண்டை (சரிகை) முதலியவற்றின் பந்து.

திம் - திம்மன் = 1. தடித்தவன். 2. ஆண்குரங்கு.

க. திம்ம, தெ. திம்மடு.

திம்மலி = தடித்தவள் (யாழ்.). திம்மலி - திமிலி.

திம்மலி = பெருமீன் (திவா.). வ. திமி.

திமி - திமிசு = தளத்தைக் கெட்டியாக்குங் கட்டை. தெ. திமிச.

திமிதம் = 1. பேரொலி. 2. உறுதி (யாழ். அக.).

திமிர் = 1. மரத்துப்போகை. 2. உணர்ச்சியறும் நோய். 3. மனக்கொழுப்பு. . திமிர், தெ. திமிரி.

திமில் = 1. திரண்ட எருதின் முரிப்பு. 2. திண்ணிய மீன்படகு.

“திண்டிமில் வன்பரதவர்’’      (புறம். 24).

திமில் - திமிலம் = 1. பேரொலி. “திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்’’ (திருவாச. 29 4). 2. பெருமீன் வகை (பிங்.).

திமுதிமுவெனல் = மக்கள் திரளாக வந்து கூடுதற் குறிப்பு.

திமுக்குத் திமுக்கெனல் = தடித்த ஆள், சிறப்பாகப் பெண் நடந்து போதற்குறிப்பு.

துல் - தில் - திர் - திரள். திரளுதல் = 1. கூடுதல். மக்கள் திரளுகிறார்கள். (உ. வ.). 2. மிகுதல். “அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி’’ (மதுரைக். 240). 3. இறுகுதல். பால் திரண்டுவிட்டது. 4. பருத்தல். “தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி’’ (நாலடி. 199). 5. வீங்குதல்.