பக்கம் எண் :

1

தமிழ்ப்புலவர்
வரலாற்றுக்களஞ்சியம்

                                                     தொகுதி- 4

மகமது உசெயின் (18 நூ)

நூல்:பெண்புத்திமாலை.

மகாதேவ ஐயர் (20 நூ)

ஊர்:திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர். இவர்அட்டாவதானப் பயிற்சி மிக்கவர்.
நூல்:நாராயணசாமி நாயுடு, பா என்பவர் இயற்றிய ‘நெட்டூர்ப்புராணம்’ என்னும் நூலுக்கு வழங்கிய சாற்றுக்கவி.

மகாதேவ பாரதி (20 நூ)

நூல்:இவர் புலவர்கள் கூடிய ஓர் அவையில் அவர்களுக்குக்காற்று வேண்டும் என்பதற்காகப் பங்கா இழுத்தார். அந்தணராகிய இவர் இவ்வாறுஇழுப்பது தகுமா என்று சிலர் வினவ, அவர்களைப் பார்த்து இவர் பாடிய பாடல் ஒன்று,தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளது.

மகாதேவ முதலியார், வா (20 நூ)

ஊர்:சென்னை

இவர் இலக்கண இலக்கிய நூல்களையும் சைவசித்தாந்த நூல்களையும் கற்றுத்தேர்ந்தவர்; ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர், கல்லூரிகளில் ஆசிரியராகப்பணியாற்றியுள்ளார்.