நூல்: | திருச்செந்தூர் முருகர் பதிகம், பழநியாண்டவர் பதிகம்,பழநி நான்மணிமாலை, திருமயிலம் இரட்டைமணிமாலை, பரமாசாரியார் பாமாலை, சொக்கலிங்கசாமிகள்வெண்பா, பன்னிருபாட்டு. |
மகாரியர் (19 நூ) நூல்: | வேதாந்தகாரிய வைபவப் பிரகாசிகை. |
மகாலிங்கக் கவிராசர் (20 நூ) இவர்தம் தந்தையார் தில்லையில் சைவப்பிரகாச வித்தியா சாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தையாரைப் போலவே இவரும் புலமையாளர்; செய்யுள்இயற்றும் திறம் பெற்றவர்; இதனால் கவிராசர் என்று அழைக்கப் பெற்றார். நூல்: | சிறப்புப்பாயிரச் செய்யுட்கள். |
மகாலிங்கக் கவிராயர் (19 நூ) ஊர்: | மழவராயனேந்தல் என்னும் மழவை; வீரசைவர். | வாழ்விடம்: | சென்னை. |
இவர் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், விசாகப் பெருமாளையர் ஆகியோரிடம் பாடங்கேட்டார். சென்னையில் வாழ்ந்து கம்பராமாயணம், தணிகைப்புராணம் முதலிய நூல்களில் பெரும் பயிற்சி பெற்றார். இலக்கணப் புலமை நிரம்பப் பெற்ற இவர் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
|