பக்கம் எண் :

146

புன்னகை தவழும் பொன்முகத்துப்
     புண்ணிய காந்தித் தாத்தாவை
என்றுநாம் இனிமேல் காண்போமென
     ஏங்கி அழுதனர் பிள்ளைகளும்.

தேசப் பிதாவை இழந்தோமெனச்
     சித்தம் கலங்கினர் இந்தியர்கள்.
ஆசிய ஜோதி மறைந்ததென
     அகில உலகும் அழுததுவாம்.