பக்கம் எண் :

147


 

கண்ணன்
சொல்கிறான்
 

காந்தி கதையைக் கேட்டேன்-அண்ணா
     கண் கலங்கி விட்டேன்.
சாந்த மூர்த்தி வழியே-என்றும்
     தங்க மான வழியாம்.

உண்மை, அகிம்சை இரண்டும்-அவர்
     உயர்ந்த கொள்கை ஆகும்.
கண்ணைப் போல அவற்றை-நானும்
     கருதிக் காத்து வருவேன்.

மாந்த ருக்குள் தெய்வம்-அவர்
     வழியைப் போற்றி நடப்பேன்.
காந்தி போல வாழ்வேன்-நல்ல
     கருணை மனிதன் ஆவேன்.