பக்கம் எண் :

148

‘சிறந்த மனிதர் என்றே-எட்டுத்
     திசையும் போற்றும் காந்தி
பிறந்தார் நமது நாட்டில்’- என்ற
     பெருமை நானும் அடைவேன்.

நமது நாட்டு அரசை-இன்று
     நாமே ஆளச் செய்தார்.
இமயம் போல காந்தி-புகழ்
     என்றும் வாழ்க! வாழ்க!