பக்கம் எண் :

25


 

அம்மாவிடம் அன்பு
 

புத்திலி பாய்மிகப் பக்தியுடன்-தினம்
     பூசைகள் செய்து வருபவராம்.
நித்தமும் சூரிய னைத்தொழுதே-அவர்
     நிம்மதி யாகவே உண்பவராம்.

மாரி பொழிந்திடும் காலத்திலே-மேகம்
     மறைத்திடும் அல்லவோ சூரியனை?
சூரியன் தெரியாத நாட்களிலே-அன்னை
     சோறு பலகாரம் உண்பதில்லை.