பக்கம் எண் :

27

அம்மாவும் பிள்ளையும் வருவதற்குள்-அந்த
     ஆதவன் மேகத்தில் மறைந்துகொள்வான்.
சும்மா திரும்பியே அன்னைசெல்வார்-ஆனால்
     துக்கமோ, துயரமோ கொள்வதில்லை!

‘இன்றுநான் உண்பதில் கடவுளுக்குச்-சற்றும்
     இஷ்டம்இல்லை போலும்’ என்றுரைத்தே
அன்னையார் வீட்டினுள் சென்றிடுவார்-காந்தி
     அளவில்லாத் துன்பம் அடைந்திடுவார்.