பக்கம் எண் :

56

முதல் பேச்சு

சீமைக்குச் செல்லவே திட்டமிட்டார்-காந்தி
     சென்றிட ஏற்பாடும் செய்துவிட்டார்.
சேமமாய் காந்தியும் போய்வரவே-நண்பர்
     தேநீர் விருந்தென்று வைத்தனரே.

காலைமுதல் மாலை நேரம்வரை-வெள்ளைக்
     காகிதம் தன்னில் அடித்தடித்து,
நாலுவரிகள் எழுதி வைத்தார்-காந்தி
     நன்றி உரைத்திட வேண்டுமென்றே.