முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
4
பசுவே
பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.
வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.
சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.
கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்