| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 55 |
சாசனச் செய்யுள் இனவ . . கம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட் சின மதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்ததொக்கும் கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே. குறிப்பு :-சுந்தரத் தென்னவன் - சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஐ. இவன் கி.பி. 1251-1271 வரையில் அரசாண்டான். சிதம்பரக் கோவிலின் மேற்குக் கோபுரத்தை அமைந்தவன் இவன். வனசத் திரு - செந்தாமரையில் உள்ள திருமகள். செஞ்சொற்றிரு சொல்லின் செல்வியாகிய கலைமகள். சோழகுலவல்லி இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 621. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.621. S.I.I. Vol. IV.) விளக்கம் : திருமூலத்தானமுடையான் என்பவர் இச் செய்யுட்களை இயற்றினார். சாசனச் செய்யுள் ஓதுஞ் சகரர் யாண்டோ ரொருபத்தெட்டில் மேலாதி மூலநாளி லானிதனில் - சோதி துளங்கிலமேல் சோழன் சோழகுல வல்லி களங்கமற வைத்தான் கரு. 1 வண்ணந் திகழுங் கொடியாட மன்னுஞ் சோழ குலவல்லி நண்ணுந் தலைமை யுடையாரை நாமார் புகழப் பாமாலை யெண்ணும் படியில் புகழாளர் என்றே யன்றே யென்னுடைய கண்ணும் பழனக் கழுமலமுங் கலந்தார்த் திருவ மலந்தாரேல். |