205 | நண்ணிய நக்ஷத் திரமென னல்லோ னண்ணிய திருவிளக் கெண்பதுங் கண்ணெனக் காவியர் கயல்பயி லாவியூ ரதனிற் றிக்குடை யிவரு முக்குடை யவர்தம் அறப்புற மான திறப்பட நீக்கிச் |
210 | சாலி விளைஞிலம் வேலி யாக்கி முதல்வதின் மூன்றே முக்காலே யரைக்கா லிதன்த னிவந்த மியல்வகை யுரைப்பில் ஒப்பத் திருவனை யவர்முப்பத் திருவர் பாடல் பயின்ற நாடக மகளிர்க்கும் |
215 | நெஞ்சா சார நிறைவொடு குறையாப் பஞ்சா சாரியப் புகுதி யோர்க்கும் நறைப்புது மலர்விரி நந்தவான மிறைப்புத் தொழில்புரிந்த விருந்தவத் தோற்கும் யோகி யொருவனுக்கு நியோக முடைநில |
220 | . . . . . . . . . . . . வாழியர் செஞ்சடைக் கடவுடன் றிருவாக் கேழ்வித் தஞ்சடைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில் விதித்த முறைமை மதித்து நோக்கி யின்னவை பிறவு மாராஜ ராஜன் |
225 | றன்னவை முன்னற் றத்துவ நெறியி லறங்கள் யாவையு மிறங்கா வண்ணம் விஞ்ஞா பனத்தால் மிகவெளிப் படுத்தோன் அன்பது வேலியி லடைக்குன் றகர்க்கு மொன்பது வேலி யுடைய வுரவோன் |
230 | கொம்பர் நாடுங் குளிர்மலர்ச் சோலை யம்பர் நாடன் ஆலங்குடிக் கோன் தெண்டிரைப் பழனத் திரைமூர் நாடன் வண்டிரைத் துயர்பொழில் மணற்குடி நாடன் நேரிய னருமொழி நித்த வினோதன் |
235 | காரிய மல்லதோர் காரிய நினையா தாராண் டலைமைக் கற்பக சதுசன பேராண் டலைமைப் புணர்புயத் துரவோன் |