22 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
வழங்கிவருகின்றன; மற்றச் செய்யுள்களெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது கிடைத்துள்ள அசதி கோவைச் செய்யுள்கள் இவை: அற்றாங் கியகரத் தைவே லசதி யணிவரைமேன் முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிணூற் கற்றார் பிரிவுங்கல் லாதவ ரிட்டமுங் கைப்பொருள்க ளற்றா ரிளமையும் போலே கொதிக்கு மருஞ்சுரமே. 1 அருஞ்சஞ் சலங்கொண்ட வைவே லசதி யகல்வரையி னிருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும் பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே. 2 அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி யணிவரைமே னிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றிள நீரினங்கள் குலையுண் டிடியுண்டென் கையினி லெற்றுண்டு குட்டுமுண்டு விலையுண் டடியுண்டு கண்ணீர் ததும்பவும் வெட்டுண்டவே. 3 அழற்கட்டுக் கட்டிய வைவே லசதி யணிவரையின் மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லா ளுழக்கிட் டுரியிட்டு முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டுக் குழற்கட் டவிழ்த்துட னங்களின் றேமயிர் கோதினளே. 4 அறங்காட் டியகரத் தைவே லசதி யகன்சிலப்பி னறங்காட்டுங் கஞ்சத் திருவனை யீர்முக நீண்டகுமிழ்த் திறங்காட்டும் வேலுஞ் சிலையுங்கொல் யானையுத் தேருங்கொண்டு புறங்காட்ட வுந்தகு மோசிலைக் காமன்றன் பூசலிலே. 5 ஆலவட் டப்பிறை யைவே லசதி யணிவரைமே னீலவட் டக்கண்க ணேரொக்கும் போதந்த நேரிழையாள் |