பக்கம் எண் :

  

19-ஆம் நூற்றாண்டில்
உரைநடை நூல்கள்

19-ஆம் நூற்றாண்டில், நம்மவரும் அச்சியந்திரம் வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்ட பிறகு தமிழில் உரைநடை நூல்கள் பல வெளி வந்தன. பாடசாலைப் புத்த கங்களாகவும், சமய நூல்களாகவும், கதைகளாகவும், வேறு பொருள் பற்றியும் பல உரை நடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அந்நூல்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பட்டியலாக அமைப்பது இயலாது. சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகமாக வெளிவந்த உரை நடை நூல்களில் சிலவற்றை மட்டும் இங்குப் பட்டியலாகத் தருகிறேன். இது முழு விவரப் பட்டியல் அன்று என்பதைக் கருதவேண்டுகிறேன்.

ஆண்டுநூலின் பெயர்பதிப்பாசிரியர்,
  நூலாசிரியர் பெயர்
1815 இராமாயணத் துத்தர திருச்சிற்றம்பல தேசிகர்.  
 காண்டக் கதை (வால்மீகி  
 இராமாயணம் உத்தர  
 காண்டம் வசனம்)  
1822பரமார்த்த குருவின் கதை பெஞ்சமின் பாபிங்கடன்.  
 (வீரமா முனிவர்(Benjamin Babington)
 எழுதியது) லண்டன் மாநகர்.
1826பஞ்சதந்திரக் கதை. மராட்டியிலிருந்து மொழி
  பெயர்க்கப் பட்டது.
  தாண்டவராய முதலியார்,
  சென்னை.
1826கதாமஞ்சரி.தாண்டவராய முதலியார்,
  (1846, 1850, 1860, 1869
  ஆண்டுகளிலும் பதிப்பிக்கப்
  பட்டது.