138 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
பல: | | உதியனும் செழியனும் | | 90 | போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் | | 95 | தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே | | 100 | கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். | புரு: | | ஆ! ஹா! | | | முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். | பல: | | மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் | | 105 | ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. | புரு: | | (பயந்தாற்போல்) | | | ஆ! ஆ! | பல: | | நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் | | 110 | எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் |
உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவதுபோல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர். |