| | திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. |
| 115 | அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். |
பரு: | | உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! |
| 120 | கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. |
பல: | | (தனதுள்) |
| | சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! |
புரு: | | ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. |
| 125 | நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் |
| 130 | புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் |
| 135 | பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. |
திரைக்கடல் அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி - வண்டு. கோது அறும் - குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை - பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது.