142 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| 180 | செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! | அருள்: | | நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. | | | (அருள்வரதன் முதலியோர் போக) | இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. | | | | (கலித்துறை) | | | அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. | இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா | 22 -க்கு அடி 708 | ஆசிரியத் தாழிசை | 3 -க்கு அடி 12 | வெண்பா | 1 -க்கு அடி 4 | ஆக, அங்கம்1-க்கு: பா. | 26 -க்கு அடி 724 |
அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை : உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல் கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. |