பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்141

    பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம்.
நண்ணிய நமது கனாவின்
எண்ண மேகினும் ஏகும் இனியே.
    (புருடோத்தமன் போக)
(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அருள்:   தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;
  165 நேர்ந்தது வெம்போர்.
யாவரும்:   வாழ்கநம் வேந்தே!
முதற் படைஞன்:   நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி.
யாவ:   உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்!
2-ம் படை   பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.
3-ம் படை:   மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்.
4-ம் படை: 170 யாவரோ, பகைவர்? அருளா பரணா!
தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?
அருள்:   பாண்டியன்.
யாவ:   (இகழ்ச்சியாய்)
    பாண்டியன்! சீச்சீ! பகடி.
அருள்:   ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்....
யாவ:   வியப்பு! வியப்பு!
3-ம் படை:   வேற்றா ளொருவனென்
  175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி
வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன்.
முதற் படை   அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன்.
4-ம் படை   யாதோ காரணம்? ஓதாய், தலைவா!
2-ம் படை   அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ?


பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள். பகடி - கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு.