| | பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினும் ஏகும் இனியே. |
| | (புருடோத்தமன் போக) |
(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) |
அருள்: | | தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; |
| 165 | நேர்ந்தது வெம்போர். |
யாவரும்: | | வாழ்கநம் வேந்தே! |
முதற் படைஞன்: | | நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. |
யாவ: | | உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்! |
2-ம் படை | | பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. |
3-ம் படை: | | மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். |
4-ம் படை: | 170 | யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? |
அருள்: | | பாண்டியன். |
யாவ: | | (இகழ்ச்சியாய்) |
| | பாண்டியன்! சீச்சீ! பகடி. |
அருள்: | | ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... |
யாவ: | | வியப்பு! வியப்பு! |
3-ம் படை: | | வேற்றா ளொருவனென் |
| 175 | அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். |
முதற் படை | | அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். |
4-ம் படை | | யாதோ காரணம்? ஓதாய், தலைவா! |
2-ம் படை | | அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ? |
பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள். பகடி - கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு.