160 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன்: | | ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் | | 5 | உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! | குடிலன்: | | பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் | | 10 | முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; | | 15 | என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். |
சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும். |