பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்173

(வஞ்சித் தாழிசை)

படைப்பாணர் அஞ்சலி லரிகாள்! நும்
சஞ்சிதப் பெருவாழ் வெம்
வஞ்சியன் சினத்தாற் கண்
துஞ்சிய கனவே காண்      1
படைகள்:  ஜே! ஜே! ஜே!
பாணர்: எஞ்சலில் பகைகாள்! நும்
மஞ்சுள மணி மகுடம்,
வஞ்சியன் சினத்தா னீர்
கஞ்சியுண் கடிஞையே காண்      2
படை:  ஜே! ஜே! ஜே!
பாணர்: மிஞ்சிய பகைகாள்! நும்
துஞ்சிய பிதிர்க் கூட்டம்
வஞ்சியன் சினத்தா லெள்,
நெஞ்சிலும் நினையார் காண்.      3
படை:  ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே!


வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு - சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள்.

வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் - குறைவில்லாத. மஞ்சுள - அழகுள்ள. கடிஞை - பிச்சைப் பாத்திரம்.

வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் - இறந்து போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி.