172 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... | | 90 | நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, | | 95 | பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? | | 100 | இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... | | 105 | பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது. | (வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட)
கிருபணன் - உலோபி. தீனம் - எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் - பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது. பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை. |