| 230 | திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. |
| 235 | அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? |
| 240 | இல்லா மாயை என்செய வல்லதாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி |
| 245 | இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச் சகலமும் செய்வர். அஃதவர் சமாதி. எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் |
| 250 | அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க” எனமொழி குளறி அழுதுவேண் டுவதே அன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. 2(சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க) |
சுந்தர: | 255 | எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்? |
எய்ப்பினில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி.