| | எத்தனை கருணை? என்னைகைம் மாறு? |
நட: | | நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! |
| 260 | வேலை எனதோ? உமதோ? விநோதம்! ஏவிய வழியான் போவதே அல்லால் ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே! |
சுந்தர: | | கருணா கரரே! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ |
| 265 | இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் தூங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர். |
| 270 | எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? |
கருணா: | | அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை இட்டமாம் நிட்டா பரரும் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால் |
| 275 | ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். ஈதோ உதயமும் ஆனதே; இனியென்? |
சுந்தர: | | விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே! |
| 280 | இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு? அமையும் உங்கட் கவரவர் நிலையே. 3(யாவரும் போக) |
முகமன் - முன்நின்று பாராட்டுவது. உதயம் - உறப்பாடு. சமயிகள் - பல மதத்தார்கள்.