308 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
குறள்வெண் செந்துறை) | | புருடோத்தமன்: (பாட) | | | உண்ணினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம் காட்டாய் காட்டாய். 1 | | | அவத்தைபல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன் செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம் செப்பாய் செப்பாய். 2 | | | பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர் பொருளே உன்னை அறியவவா வியகரணம் அலமாக்க அகத்திருந்தாய் அச்சோ அச்சோ. 3 | | | (புருடோத்தமன் சற்றே அகல) (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | குடி: | | (தனிமொழி) | | 40 | மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்! தேவரும் உளரோ? யாதோ? அறியேன். இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம் |
கு. செந்துறை-1. உண்ணினைவில் - மனக் கருத்தில். 2. அனவரதம் - எப்போதும். 3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ. |