பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 309 |
| | மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை என்பர். ஓசையும் உருவும்! | | 45 | பாடிய பாட்டின் பயனென்! அஃதோ! நாடி அறிகுதும். நன்று நன்று. | | | (புருடோத்தமன் திரும்பிவர) | | | (குறள்வெண் செந்துறை - தொடர்ச்சி) | புரு: | | (பாட) | | | புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப் புன்மை யோர்க்கிங் குலவாதென் உளநிறையும் உனதுண்மை உணர்த்தும்வகை உண்டே உண்டே. 4 | | | பெத்தமனக் கற்பிதமே பிறங்குநினை வெனப்பிதற்றும் பேதை யோர்க்கோர் யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யென்னே. 5 | | | தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை தேரா திங்ஙன் ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் ஊழே ஊழே. 6 |
மருள்தரு - மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன். குறள்வெண் செந்துறை - 4. புலன் ஆர - (கண்ணாகிய) புலன் நுகரும்படி. போதம் இலா - அறிவு இல்லாத. 5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் - இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் - விளங்கும். யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல். இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6 - ஆவது செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க. |