310 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | குடி: | | சேரனே யாமிது செப்பினோன். போரினில் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். | | 50 | ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன். | | | (புருடோத்தமன் திரும்பிவர) | புரு: | | (தனிமொழி) | | | என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல். எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ! | | | (குடிலன் எதிர்வர) | | | (குடிலனை நோக்கி) ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்! | குடி: | | அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! |
அநுகூலம் உரைத்தான் - சேரன் போர் தொடுத்தது கனவை விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த - தங்கிய. கௌவை - துன்பம். ஜடிதி - விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே. |