| | அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி |
| 40 | நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும் காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே! “என்னோ இதற்கும் யோசனை எந்தாய்! கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா |
| 45 | நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே. ஏததற் கையம்? இதுவிட் டடிமை பெயர்வது பெரிதல, பேருல கதற்குத் துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய |
| 50 | பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும் சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப் பாதா தரவே போதா தோதுணை? ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின், ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை. |
| 55 | அன்னையும் நின்னை அன்றிவே றறியேன். உன்னதே இவ்வுடல். உன்திரு உள்ளம் உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன். அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம் கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை! |
| 60 | அன்பாம் உன்பால் ஐய! உன்மகள் வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.” |
2-ம் தோழி | | மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ! இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்? |
முதற்றோழி | | எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்? |
43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம் தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள்.